
கோவை: உற்பத்திக்காகவும், இருப்பு வைத்துக் கொள்வதற்காகவும், பருத்தி கொள்முதல் செய்யும்போது நூற்பாலைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் சுந்தரராமன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பருத்தியின் உண்மையான பயனர்கள், குறிப்பாக பருத்தி ஜவுளி ஆலைகள் மேற்படி குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் ஜவுளி ஆணையர் அலுவலகம் வெளியிடும் மதிப்பீடுகளை மட்டும் நம்பியிருக்க வேண்டும். வேறு எந்த அமைப்பும் அளிக்கும் செய்தி அறிக்கைகள் அல்லது தகவல்களை புறக்கணிக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment