
மும்பை: இம்மாதம் 18-ம் தேதி வரை கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தின் விமான சேவையை ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. செயல்பாட்டு காரணங்களால் விமான சேவை ரத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தனியார் விமான சேவை நிறுவனமான கோ ஃபர்ஸ்ட், மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த மே மாதம் தங்கள் நிறுவனம் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறி, தாமாக முன்வந்து தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்தது. இந்தச் சூழலில் வரும் 18-ம் தேதி வரையில் விமான சேவையை ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment