
மும்பை: இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாகி உள்ளது ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ (எஸ்பிஐ). இதன் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபத்தின் அடிப்படையில் எஸ்பிஐ முதலிடத்துக்கு வந்துள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது எஸ்பிஐ. நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கி. இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 2023-24 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.18,537 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இதே காலகட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஈட்டிய நிகர லாபம் ரூ.16,011 கோடி ஆகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment