
ஓசூர்: உரிய விலையும், விற்பனையும் இல்லாததால் சூளகிரி பகுதியில் சாலையோரங்களில் கொத்தமல்லி இலையை கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. சந்தை வாய்ப்பு மற்றும் சாகுபடி தொடர்பாக வேளாண்துறை மூலம் ஆலோசனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், மத்திகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி மற்றும் கீரை, புதினா, கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment