
மணிலா: கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தின் காரணமாக ஆசியாவின் வளரும் நாடுகளில் கடந்த ஆண்டு 7 கோடி பேர் கடுமையான வறுமையில் வாடியதாக பிலிப்பைன்ஸை மையமாகக் கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சில முக்கிய புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு ஆசியாவின் வளரும் நாடுகளில் 15.5 கோடி மக்கள் கடுமையான வறுமையில் சிக்கினர். இவர்களில் 6.78 கோடி பேர் கரோனா தாக்கம் வராவிட்டால் வறுமையில் சிக்கியிருக்க மாட்டார்கள். 2021-ல் மட்டும் கூடுதலாக 7.5 முதல் 8 கோடி மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment