
சென்னை: வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் ஐந்து மணி வரை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அரங்கத்தில் கருத்தரங்கம் மற்றும் கைத்தொழில் பயிற்சி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்க தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கம் பெண்களுக்காக தொழில் பயிற்சிகள் மற்றும் தொழில் தொடங்க அனைத்து உதவிகளும் சேவை மனப்பான்மையுடன் அனைத்து மாவட்டங்களிலும் செய்து வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 27 ம் தேதி அன்று காலை 9 மணி முதல் ஐந்து மணி வரை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அரங்கத்தில் கருத்தரங்கம் மற்றும் கைத்தொழில் பயிற்சி நடைபெற உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment