
சென்னை: "கடந்த 2021 மார்ச் மாத நிலவரப்படி, சுமார் 2300 ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் மட்டுமே தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் எடுத்த முயற்சிகளின் பலனாக, இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்காகி இப்போது 6800-க்கும் மேல் உயர்ந்திருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெறும் “தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் திருவிழா” தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்தபடி காணொலி வாழியாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது முதல்வர் பேசியது: "தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் நடத்துகிற "தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் திருவிழா" நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அமைச்சர் பெருமக்கள், அரசு உயர் அலுவலர்கள், தொழில் முனைவோர் என அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தவிர்க்க முடியாத சில காரணங்களால் என்னால் நேரில் கலந்து கொண்டு உங்களோடு பேச முடியவில்லை. அதில் எனக்கு வருத்தம்தான். ஆனாலும் என்னோட எண்ணங்கள் முழுக்க அங்கே தான் இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment