
கோவை: மின் கட்டண உயர்வால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழில்முனைவோர் இணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பை தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக, கூட்டமைப்பின் தலைவர் ஜேம்ஸ் மற்றும் செயலாளர் ஜெயபால் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் உள்ள எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எல்டிசிடி 111பி நுகர்வோருக்கு நிலை கட்டணம் ரூ.35-லிருந்து ரூ.153-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment