
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை சற்று சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிவடைந்து 65,745 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 19,556 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற இறக்கமின்றி தொடங்கியது. பின்னர் சரிவடையத் தொடங்கின. காலை 10:00 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 259.45 புள்ளிகள் சரிவடைந்து 65,587.05 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 61.35 புள்ளிகள் சரிந்து 19,509.50 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment