
அரூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி பொம்மிடி பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மூலப் பொருட்களின் விலை உயர்வால் சிலைகளின் விலை உயரும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்.18-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோல, தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment