
கோவை: ஓணம் பண்டிகை நெருங்குவதைத் தொடர்ந்து கோவையில் பூக்கள் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் அருகே, ஆர்.ஜி வீதியில் பூ மார்க்கெட் வளாகம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து வியாபாரிகள் பூ விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் பல்வேறு வகையான பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகை தினம் நெருங்குவதைத் தொடர்ந்து கோவை பூமார்க்கெட்டில் பூக்களின் விற்பனை தீவிரமடைந்துள்ளது. அதேசமயம், உற்பத்தி மற்றும் வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை கடந்தாண்டை ஒப்பிடும் போது, நடப்பாண்டு மூன்று முதல் நான்கு மடங்கு விலை குறைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment