
கோவை: நடப்பாண்டு சீசனில் தற்போது வரை 320 லட்சம் பேல்கள் பருத்தி சந்தைக்கு வந்துள்ளன. ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவ பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என, தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருத்தியை முக்கிய மூலப்பொருளாக இயங்கும் இந்திய ஜவுளித்தொழில், விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக திகழ்கிறது. ஆண்டுதோறும் அக்டோபரில் தொடங்கி செப்டம்பர் வரை பருத்தி சீசனாகும். இவ்வாண்டு சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் 320 லட்சம் பேல்கள் பருத்தி சந்தைக்கு வந்துள்ளதாகவும், இறக்குமதி வரி 11 சதவீதத்தை நீக்கினால் ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment