
கோவை: பல்வேறு துறைகளில் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் ‘ஸ்டார்ட் அப் திருவிழா’ என்ற பெயரில் தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று (ஆக.19) முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழக அரசின் ஸ்டார்ட் அப் ஊக்குவிப்பு திட்டத்துக்கான ஆலோசகர் மற்றும் தென்னிந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜலபதி கூறியதாவது: ‘ஸ்டார்ட் அப்’ என்றால் புதுமையான யோசனைகளால் தொழில்துறையில் சாதனை ஏற்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவது என்பதாகும். ‘ஸ்டார்ட் அப்’ தொழில்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வரிச்சலுகைகளை வழங்குகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment