
இந்தியாவில் அதிகரித்துவரும் மக்கள் தொகை தொழிலாளர் பங்களிப்பை அதிகரிக்கும் என்றாலும்கூட அதுமட்டுமே பொருளாதாரத்தை வலுவானதாக்கிவிட போதுமானதாக இருக்காது. அதற்கு இங்குள்ள கற்றல் விளைவின் தரமும் ஒரு காரணமாகும் என்று கடன்தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், கல்வித்தரத்தை மேம்படுத்துவது இந்தியா போன்ற நாடுகள் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் வேலையிழப்புக்கு உள்ளாவதைத் தவிர்த்துக் கொள்ள இயலும். குறிப்பாக பிபிஓ, கால் சென்டர்கள் போன்ற சேவை மையங்களிலும் வேலையிழப்பைத் தவிர்க்கலாம். இப்போதைக்கு இந்தியாவின் கற்றல் விளைவின் தரம் பாகிஸ்தான், வங்கதேசத்தில் உள்ளதுபோல்தான் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment