
பழநி: விநாயகர் சதுர்த்திக்காக பழநி யில் சிலைகள் தயாரிப்புப் பணியில் குஜராத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப் படுகிறது. இதை முன்னிட்டு பொது இடங்கள், கோயில்களின் முன் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவது வழக்கம். பின் ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படும். ஆண்டுதோறும் பழநியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்தோர் விநாயகர் சிலைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment