
கோவை: கோவையில் இரண்டு நாட்கள் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட ‘ஸ்டார்ட் அப்’ திருவிழாவில், மருத்துவஅவசர காலங்களில் பயன்படுத்தப்படும் டிரோன், மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட வீல்சேர் என காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றதுடன், பல இளைஞர்கள் புதிதாக ஸ்டார்ட் அப் தொழிலில் ஈடுபட உத்வேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பிரத்யேக கண்காட்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் கடந்த 19, 20-ம் தேதிகளில் நடைபெற்றது. ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வரிச் சலுகைகளை வழங்குகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment