
மும்பை: காலை 10:56 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 115.63 புள்ளிகள் உயர்வடைந்து 71,798.86 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 66.25 புள்ளிகள் உயர்ந்து 21,688.65 ஆக இருந்தது. பங்குச்சந்தைகள் இன்றைய (சனிக்கிழமை) சிறப்பு வர்த்தக அமர்வை ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 71,983 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 91 புள்ளிகள் உயர்ந்து 21,714 ஆக இருந்தது.
வழக்கமாக சனிக்கிழமைகளில் பங்கச் சந்தைகள் இயங்காது. ஆனால், மகாராஷ்டிராவில் வரும் திங்கள் கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், வழக்கத்துக்கு மாறாக இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் நடைபெற்று வருகின்றன. பங்குச்சந்தைகள் இன்று தொடக்க அமர்வை லாபத்துடன் தொடங்கின. தொடர்ந்து சற்றே தடுமாறி ஏற்ற இறக்கமின்றி பயணித்து மீண்டும் சற்றே மீண்டது. காலை 10:56 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 115.63 புள்ளிகள் உயர்வடைந்து 71,798.86 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 66.25 புள்ளிகள் உயர்ந்து 21,688.65 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment