
புதுடெல்லி: கடந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 15.2 கோடி ஆக அதிகரித்துள்ளது. விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 2023-ம் ஆண்டில் உள்நாட்டில் உள்ள நகரங்களுக்கு விமானத்தில் பயணித்தோர் எண்ணிக்கை 15.2 கோடி ஆக அதிகரித்துள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர எண்ணிக்கை ஆகும். கரோனா பாதிப்புக்கு முன்பு 2019-ம் ஆண்டு உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 14.4 கோடி ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment