
சென்னை: யூடியூப்பில் ஒரு கோடி சந்தாதாரர்களை கொண்டுள்ள வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இணையம் சார்ந்த தொழில் குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர், யூடியூப் சேனல் தொடங்கியது என்பது குறித்து பேசினர். அதில், "நாங்கள் எல்லோரும் ஏதோ ஒரு பணியை செய்துகொண்டிருந்தவர்கள். கிராமத்தில் நாங்கள் கொண்டிருந்த அத்தனை தொழிலும் தோல்வியே சந்தித்தது. எங்கள் கிராமத்தின் வழக்கப்படி, அனைவரும் வெளிநாடு செல்லலாம் என்றே முடிவு செய்திருந்தோம். அப்போதுதான் வளர்ந்து வரும் இணையத்தை கொண்டு ஏதாவது செய்து பார்க்கலாம் என்று முடிவெடுத்து, ட்ரெண்டில் இருந்து சமையல் பக்கம் எங்களின் கவனம் சென்றது. தாத்தா ஏற்கெனவே சமையல்காரர் என்பதால் அந்த முடிவு எங்களுக்கு எளிமையாக அமைந்தது. அப்படிதான் யூடியூப் சேனல் தொடங்கினோம். அது இன்று வரை சென்றுகொண்டிருக்கிறது" என்று பகிர்ந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment