
உதகை: நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு டிசம்பர் மாத விலையாக குறைந்த பட்சம் கிலோவுக்கு ரூ.15.40 என நிர்ணயம் செய்து இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், தோட்டங்களில் பறிக்கும் பசுந்தேயிலையை தனியார் தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment