
உதகை: லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தால், நீலகிரி மாவட்டத்தில், ரூ.18 கோடி மதிப்பிலான தேயிலை தூள் தேக்கமடைந்துள்ளது. மேலும், காய்கறிகள் தேக்கமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக தேயிலை உற்பத்தி உள்ள நிலையில், குன்னூரில் உள்ள ஏல மையத்தில் தேயிலை தூள் ஏலம் விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. நாட்டிலேயே 2-வது பெரிய ஏல மையமான குன்னூர் தேயிலை ஏல மையத்தில், தென் மாநிலங்களில் அதிகபட்ச தேயிலை தூள் ஏலம் விடப்படுகிறது. வாரத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரையிலான தேயிலை தூள் ஏலம் விடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment