
ஓசூர்: தமிழகம் மற்றும் கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் புதினா சாகுபடி பரப்பு அதிகரிப்பு காரணமாக வழக்கமாக கர்நாடக, ஆந்திர மாநில சந்தைக்குச் செல்லும் ஓசூர் புதினாவின் தேவை குறைந்து விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, உத்தனப் பள்ளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் புதினா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் புதினா ஓசூர் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, ஆந்திரா,கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்குச் செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதினா ஒரு கட்டு ரூ.30 முதல் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மகசூல் அதிகரிப்பால் ஒரு கட்டு ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment