
புதுடெல்லி: உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலில் இருந்த எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார் ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் லூயி வுய்டன் நிறுவனத்தின் (LVMH) சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட். ஆடம்பரப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், எல்விஎம்ஹெச் (LVMH) பங்குகள் 30 சதவீதம் அதிகரித்த பிறகு, 2023 ஆம் ஆண்டில் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 39 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த வணிக இதழான ஃபோர்ப்ஸின் (Forbes) அறிக்கையின்படி, உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலில் இருந்த எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார் ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் (LVMH) சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault). உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பிரான்ஸைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட், எலான் மஸ்கை முந்தி பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். எலான் மஸ்க் 2-வது இடத்தில் இருந்து வந்தார். இதையடுத்து டெஸ்டாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் மீண்டும் முதல் இடத்துக்கு வந்தார். பின்னர் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். தற்போது அது எக்ஸ் வலைதளம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment