
புதுடெல்லி: தன்னிறைவு காணும் வகையில் மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறுமுயற்சிகளின் காரணமாக இந்தியாஇன்று பொம்மை ஏற்றுமதியில் உலக முன்னிலை வரிசை நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் தன்னிறைவு அடைய பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதன் பயனாக, பொம்மை ஏற்றுமதியில் இந்தியா இன்று உலகளவில் ஒரு வலுவான போட்டியாளராக மாறியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment