
கோவில்பட்டி: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி யில் வெண்கலப் பானைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
தமிழர் திருநாளை முன்னிட்டு வீடுகளில் வெண்கலம் மற்றும் மண் பானைகளில் பொங்கலிடுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், புது மணத் தம்பதிகளுக்கு தலைப் பொங்கல் சீர்வரிசை பொருட்களில் முக்கிய இடம் பிடிக்கும் வெண்கல உருளிகள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட வெண்கல உருளிகள் கிலோவுக்கு ரூ.100 வரை உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் ராஜ முந்திரியில் இருந்து வெண்கல உருளிகளும், கும்கோணத்தில் இருந்து வெண்கல அகப்பைகளும் விற்பனைக்கு வருகின்றன. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கோவில்பட்டி நகரக் கடைகளில் இவை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment