
பொள்ளாச்சி: ஆன்லைனில் ஷூ ஆர்டர் செய்த கல்லூரி மாணவருக்கு பழைய கிழிந்த ஷூவையும், காலணியையும் நிறுவனம் அனுப்பியிருந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த அங்குலக்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிஹரபிரியன். இவர், பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் தனக்கு ஷூ ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, ஆன்லைன் நிறுவனம் அவருக்கு கூரியர் மூலமாக அனுப்பியுள்ளது. பணம் செலுத்தி பார்சலை வாங்கி பிரித்து பார்த்த போது, கிழிந்த ஷூ மற்றும் பெண்கள் அணியும் கிழிந்த காலணியும் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர், அந்த பார்சலை திருப்பி அனுப்ப முடியாமல் தவித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment