
சென்னை: தமிழக அரசு அளிக்கும் வரியைவிட மத்திய அரசு வழங்கும் நிதி அதிகம் என்று, சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புள்ளி விவரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ எனும் முன்முயற்சி பிரச்சார இயக்கம் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் நடமாடும் முகாம் வாகனத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கி வைத்தார். மத்திய அரசின் கடன் வழங்கும் திட்டங்களின்கீழ் தேர்வான பயனாளிகளுக்கு கடன் தொகையை வழங்கினார். அவர்களது கருத்துகள், ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment