
ஓசூர்: கர்நாடகாவில் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டன.
மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நீதி சன்ஹிதா ( பிஎன்எஸ் ) சட்டத்தின் கீழ் விபத்து வழக்குகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் நேற்று முதல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லவிருந்த தமிழக பதிவெண் கொண்ட லாரிகளை போலீஸார் தமிழக எல்லையான ஜூ ஜூ வாடியில் நேற்று காலை 6 மணி முதல் தடுத்து நிறுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment