
புதுடெல்லி: ஆண்டுக்கு ரூ.8.3 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 2027-ம் ஆண்டுக்குள் 10 கோடியாக உயரும் என்று சர்வதேச முதலீட்டு நிறுவனம் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இந்தியர்களின் வருமானம், நுகர்வுத் திறன், சொத்து உள்ளிட்டவை தொடர்பாக கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் 3-வது இடத்துக்கு முன்னகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய மக்களின் வருவாய் அடுத்த 3 ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்றுஅந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment