
கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விரைவில் அடுத்தகட்ட போராட்டம் நடத்த உள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிலைக் கட்டண உயர்வை திரும்ப பெறுதல், எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கு உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டண முறையை நீக்குதல், மேற்கூரை சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தி திட்டங்களுக்கு விதிக்கப்படும் நெட் வொர்க் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழில் துறையினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இருப்பினும் தமிழக அரசு சார்பில் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாததால் தொழில் துறையினர் அதிருப்தி யடைந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment