
புதுடெல்லி: மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது புத்தாண்டு செய்தியில் கூறியுள்ளதாவது: இந்தியப் பொருளாதாரம் பல தசாப்தங்களாக எதிர்பார்த்த எழுச்சியை அடைவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் தற்போது தென்படத் தொடங்கியுள்ளன.
எனவே, சீனாவின் விநியோகச் சங்கிலி மேலாதிக்கத்துக்கு நம்பகமான சவாலை இந்தியா ஏற்படுத்த வேண்டும். அதுதான் தற்போதைய உலகத்தின் தேவையாக உள்ளது. அதற்கான சிறந்த வாய்ப்பை 2024-ம் ஆண்டு வழங்கும். மேலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடுகளும் நம்மை வந்தடையும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment