
சென்னை: தமிழகத்தில் 4ஜி சேவை வரும் ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளர் டி.தமிழ்மணி சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வீீடுகளுக்கு ஃபைபர் சேவையை வழங்குவதில் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் முன்னணியில் உள்ளது.
இதன் மூலம், அதிவிரைவு, அளவில்லா டேட்டா மற்றும் பேசும் வசதியை வணிகம், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் என பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், மதிப்புக் கூட்டப்பட்ட ஓடிடி சேவைகளுடன் வழங்குகிறோம். தற்போது 4.45 லட்சம் ஃபைபர் இணைப்புகள் உள்ளன. மாதம்தோறும் 16 ஆயிரம் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மாதம்தோறும் அதிக அளவு ஃபைபர் இணைப்புகள் வழங்குவதில் பிஎஸ்என்எல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment