
சென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்கு உலக முதலீட்டாளர் மாநாடு உதவும் என்று முன்னணி தொழில் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மாநாட்டின் நிறைவு நாளான இன்று பல லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழக தொழில்துறை சார்பில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். வரவேற்புரையாற்றிய அமைச்சர்டி.ஆர்.பி.ராஜா, ‘‘ஆட்டோமொபைல், உதிரிபாகங்கள், டயர் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஏற்றுமதி 5.37 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்தது. இது நடப்பாண்டு 5.6 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்’’ என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment