
சென்னை: விமானங்கள் நிறுத்துமிடத்தில் ஓடுதளத்துக்கு அருகில் பயணிகள் அமர்ந்து உணவு சாப்பிட்டு விவகாரம் வைரல் ஆன நிலையில் இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விமான பாதுகாப்பு ஆணையம் மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் மட்டுமல்லாது இந்த விவகாரத்தில் மும்பை விமான நிலையத்தை பராமரிக்கும் எம்ஐஏஎல் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.90 லட்சம் எம்ஐஏஎல் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோவுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையில் ரூ.1.20 கோடி விமான பாதுகாப்பு ஆணையம் விதித்துள்ளது. மீதமுள்ள 30 லட்ச ரூபாய் அபராதத்தை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விதித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment