
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம்.
அங்கு காய்கறி, பழம், பானை, மலர் மாலை, கரும்பு என பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால், பல பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிவார்கள். இதனால் கோயம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதி களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க, கடந்த ஆண்டு முதல் சந்தையின் தென் மேற்கு பகுதியில் கனரக லாரிகள் நிறுத்தும் இடத்தில் சிறப்பு சந்தை அமைக்கப் பட்டு, கரும்பு கட்டு, மஞ்சள், இஞ்சி கொத்து மட்டும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment