
மதுரை: மதுரை ரயில்வே மைதானத்தில் கோட்ட மேலாளர் ஸ்ரீ ஷரத் வஸ்தவா தேசிய கொடியை ஏற்றி பேசும்போது, கோட்டத்தில் அனைத்து பிரிவிலும் 11.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என, தெரிவித்தார்.
நாட்டின் 75வது குடியரசு தின விழாவையொட்டி, மதுரை ரயில்வே காலனி ரெட் பீல்டு மைதானத்தில் கோட்ட மேலாளர் ஸ்ரீ ஷரத் வஸ்தவா தேசிய கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். விழாவில் அவர் பேசியதாவது: நடப்பு நிதியாண்டில் (2023-24) அனைத்து பிரிவு வருவாயில் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது, 11.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளோம். டிசம்பர் வரை வருவாய் கடந்தாண்டு இதே காலத்தில் ரூ.800 கோடியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு 894 கோடி ஆகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment