
புதுடெல்லி: அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதால் சர்வதேச சந்தையில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் அரிசி விலை உயர்ந்துள்ளது.
உலகின் உணவு தானிய தேவையில் உக்ரைனும் ரஷ்யாவும் சுமார் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தன. கடந்த 16 மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடிப்பதால் சர்வதேச அளவில் உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஐ.நா. சபையின் பொருளாதார தடையால் ரஷ்யாவின் உணவு தானியங்களை பெரும்பாலான நாடுகள் புறக்கணித்து வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment