
புதுடெல்லி: மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் 11% அதிகரித்து ரூ.1.65 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. 2017 ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து 6-வது முறையாக ஜிஎஸ்டி வசூலானது ரூ.1.6 லட்சம் கோடி என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு, வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிப்பும், வரி ஏய்ப்பை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுமே காரணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment