
மதுரை: மதுரையில் முதல்முறையாக பேரீச்சம் பழம் சாகுபடி செய்து விளைவித்துள்ளார் விவசாயி மு.மூவேந்திரன். மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் மு.மூவேந்திரன் (47). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர் விருப்ப ஓய்வு பெற்று விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். அலங்கா நல்லூர் அருகே இடையபட்டியில் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் பேரீச்சம் பழம் பயிரிட்டுள்ளார். 4 ஆண்டுகளான நிலையில், தற்போது அறுவடை செய்யத் தொடங்கியுள்ளார்.
இது குறித்து மு.மூவேந்திரன் கூறியதாவது: ஓய்வுக் காலத்தில் நிரந்தர வருவாய் ஈட்டும் வகையில் அதிக பராமரிப்பில்லாத விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். வளைகுடா நாடுகளில் வேலை பார்த்த எனது சகோதரர் நிர்மல் கொடுத்த ஆலோசனையின் பேரில் பேரீச்சம் பழ சாகுபடி செய்ய முடிவு செய்தேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment