
மும்பை: இந்தியாவில் கல்லூரி வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான ஐடியாபோர்ஜ் (ideaForge), பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ளது. இந்நிறுவனம், கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டு பங்குச் சந்தையில் நுழையும் முதல் ஸ்டார்ட் அப் நிறுவனம் என கூறப்படுகிறது.
இந்நிறுவனம் ஐஐடி பாம்பேயில் பயின்ற முன்னாள் மாணவர்களால் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது இந்தியாவின் முக்கியமான ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment