
தஞ்சாவூர்: வருமான வரி செலுத்துவோர் அளித்த தகவல் தவறானது என்பது தெரியவந்தால், 10 ஆண்டுகள் கழித்து கூட அபராதம் விதிக்கவும், சிபிஐ விசாரணை மேற்கொள்ளவும் சட்டத்தில் வழிவகை உள்ளது என தஞ்சாவூரில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் தெரிவித்தார்.
வருமான வரியை முன்கூட்டியே செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. இதில், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் து.நித்யா தலைமை வகித்து பேசியது: வருமான வரியை முன்கூட்டியே செலுத்த விரும்பினால் செலுத்தலாம். வரித் தொகை எவ்வளவு இருக்கும் என்பதைக் கணிக்க முடியாவிட்டாலும், அதில் 90 சதவீதத்தை செலுத்தலாம். மொத்தமாக செலுத்துவதற்கு சிரமம் ஏற்பட்டால், ஜூன் 15, செப்.15, டிச.15, மார்ச் 15 என 4 தவணைகளில் செலுத்தலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment