
கோவை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் நூற்பாலைகள், குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடன் கூட போட்டியிட முடியாத சூழல் உள்ளதாக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சைமா) தெரிவித்துள்ளது.
இது குறித்து ‘சைமா’ தலைவர் எஸ்.கே.சுந்தர ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்டவை நாட்டின் நூற்புத்திறனில் 55 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. உலகளாவிய பொருளாதார மந்த நிலை, தேவை வெகுவாக குறைந்துள்ளது ஆகிய காரணங்களால் கடந்த 18 மாதங்களாக நூற்பு தொழில் சுணக்க நிலையில் உள்ளது. பருத்திக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத இறக்குமதி வரி, செயற்கை பஞ்சு மற்றும் இழை நூல்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவை கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment