
புதுடெல்லி: ‘‘உலகளாவிய சவால்களுக்கு இடையே, இந்தியாவின் பொருளாதாரம் அபார வளர்ச்சியை எட்டியுள்ளது’’ என சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்து. சர்வதேச நிதியத்தின் நிர்வாகவாரிய இயக்குநர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஓராண்டில் இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி அபாரமாக உள்ளது. அமைப்பு சாரா தொழில் துறையில் வேலைவாய்ப்பு நிலவரம்கரோனோவுக்கு முந்தைய நிலையிலிருந்து மீண்டுள்ளது. உலகளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் நிதித்துறை செயல்பாடுகள் வலுவாக உள்ளன. கரோனா மற்றும் சர்வதேச பிரச்சினைகளால், 2022-23-ம் நிதியாண்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்தாலும், இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி மற்றும் கச்சா எண்ணெயை ரஷ்யாவிலிருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்வதில் பின்பற்றிய யுக்திகள் ஆகியவை நிலைத் தன்மையை வழங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment