
மும்பை: பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 22.4 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்ட டாப் 10 பங்குச் சந்தைகளில் ஒன்றாக இந்திய பங்குச் சந்தை இடம்பிடித்துள்ளது.
இதனிடையே, பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை 22.4 சதவீதம் உயர்ந்துள்ளது. டிசம்பர் 25-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8.49 கோடியாக உள்ளது. அதிக பங்குச் சந்தை முதலீட்டாளர்களைக் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதல் இடம் வகிக்கிறது. அம்மாநிலத்தில் 1.48 கோடி முதலீட்டாளர்கள் உள்ளனர். இந்தப் பட்டியலில், குஜராத்தைப் பின்னுக்குத் தள்ளி தற்போது உத்தர பிரதேசம் 2-ம் இடம் பிடித்துள்ளது. அம்மாநிலத்தில் 89.5 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். குஜராத்தில் அந்த எண்ணிக்கை 76.5 லட்சமாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment