
மதுரை: மதுரையில் 100 ஆண்டுகளாக செயல்பட்ட பழமையான மதுரை கீழமாரட் வீதி வெங்காயம் மார்க்கெட், மாட்டுத் தாவணி அருகே இடமாறுகிறது. இதற்காக மாட்டுத் தாவணியில் ரூ.10.30 கோடியில் வெங்காயம் மார்க்கெட் அமைக்கும் பணி மாநகராட்சி சார்பில் நடக்கிறது.
மீனாட்சியம்மன் கோயிலை மையமாக கொண்ட மதுரை மாநகரத்தில் அனைத்து வர்த்தகமும், கோயிலை சுற்றியுள்ள வீதிகளிலே செயல்பட்டது. சிம்மக்கல் பழ மார்க்கெட், பழைய சென்டரல் மார்க்கெட், கீழ மாரட் வெங்காயம் மார்க்கெட், மாசி வீதி வெங்காயம் மார்க்கெட் போன்றவை, இரவு, பகலாக செயல்பட்டன. மக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் வருகையால், மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகள், நள்ளிரவும் இயங்கும். அதனாலே, மதுரை மாநகரம் தூங்கா நகரம் என பெயரெடுத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment