
கோவை: தமிழ்நாட்டில் ஃபிளாட் பத்திரப்பதிவு செய்வதில் பழைய முறையையே பின்பற்ற வேண்டும் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோவை ‘கிரெடாய்’ தொழில் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ‘கிரெடாய்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”அடுக்குமாடி குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் பத்திரப் பதிவு செய்யும் முறையில் தமிழக அரசு டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து மாற்றம் செய்துள்ளது. இதுவரை அடுக்குமாடி குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் பிரிக்கப்படாத பாக நில விற்பனைக்கு ஒரு பத்திரப் பதிவு, வாங்கும் ஃபிளாட்டின் கட்டுமான ஒப்பந்தத்துக்கு மற்றொரு பத்திரப்பதிவு என இரு பத்திரப்பதிவுகளை செய்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment