About

இறக்குமதி அனுமதியால் பட்டாணி விலை குறைவு - ஒரு குவிண்டால் ரூ.4,000-க்கு விற்பனை

மதுரை: மத்திய அரசின் இறக்குமதி அறிவிப்பால் பட்டாணி விலை குவிண்டால் விலை (100கிலோ) சுமார் ரூ.7,200ல் இருந்து ரூ.4,000 ஆக விலை குறைந்துவிட்டது என்று உணவுப் பொருள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலைவாசி உயர்வால் காய்கறிகள் விலை மெல்ல உயர்ந்து வரும்நிலையில் மளிகைப்பொருட்கள் விலை 20 சதவீதம் முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், பட்டாணி விலை மட்டும் 100 மடங்கு விலை அதிகரித்தது. தமிழகம், கேரளாவில் மக்கள் அன்றாட உணவு பொருள் தயாரிப்பில் அதிகம் பட்டாணியைப் பயன்படுத்துகிறார்கள். கடந்த மூன்று ஆண்டிற்கு முன் மத்திய அரசு, பட்டாணி இறக்குமதிக்கு தடை விதித்தது. அதனால், இந்தியாவில் பட்டானி பற்றாக்குறை அதிகரித்ததால் பட்டாணி அதிகம் விளையும் வங்கதேசத்தில் இருந்து அதிகளவு கடத்தப்பட்டு வந்தது. இறக்குமதி தடை காரணமாக தமிழகம், கேரளாவில் மட்டுமில்லாது மற்ற மாநிலங்களில் பட்டாணி விலை அதிகரித்தது. பட்டாணி சார்ந்த உணவு பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட 2,000 நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்து வந்தனர். தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கம், சமீபத்தில் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: