
சென்னை: இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகளை 2023-ல் பல மடங்கு உயர்வை கண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரிவர்த்தனைகள் மற்றும் மதிப்பு என இரண்டு ரீதியாகவும் உயர்ந்துள்ளதாக தகவல்.
2022-23 நிதியாண்டில் சுமார் 8,375 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 2017-18 நிதியாண்டினை காட்டிலும் வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் 147 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. 2017-18 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 92 கோடி. 2022-23 நிதியாண்டில் டிஜிட்டல் பேமெண்ட் முறைகளில் யுபிஐ-யின் பங்கு 62 சதவீதம். 2023 டிசம்பர் மாதத்தில் ரூ.17.4 லட்சம் கோடி என்ற மதிப்பை யுபிஐ பரிவர்த்தனைகள் எட்டியது. இதனை ரிசர்வ் வங்கி உறுதி செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment