
மும்பை: நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளிவந்தன. இதையடுத்து நேற்றைய தினம் பங்குச் சந்தை பெரும் ஏற்றம் கண்டது.
சென்செக்ஸ் 1,383.93 புள்ளிகள் உயர்ந்து 68,865 ஆகவும் நிஃப்டி 418.9 புள்ளிகள் உயர்ந்து 20,686 ஆகவும் நிலைகொண்டன. சதவீதஅளவில் சென்செக்ஸ் 2.05%, நிஃப்டி 2.07% ஏற்றம் கண்டன.மும்பைப் பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.343.45 லட்சம்கோடியாக உயர்ந்தது. முதலீட்டாளர்களுக்கு நேற்று மட்டும் ரூ.5.77 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment