
கோவை: சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் கட்டிட மேற்கூரை (ரூஃப் டாப்) சூரியஒளி ஆற்றல் உற்பத்தி திட்டங்களை ஊக்குவிப்பதற்கு பதில் நெட்வொர்க் கட்டணம் என்ற பெயரில் வசூலிப்பது பசுமை திட்டங்களுக்கு மாறுவோருக்கு அபராதம் விதிப்பதற்கு சமம் என, தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் மின்தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட மரபுசாரா ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் காற்றாலை பிரிவில் 9,000 மெகாவாட், சூரியஒளி ஆற்றல் உற்பத்தியில் 4,500 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
தமிழ்நாட்டில் காற்றாலைகள் மூலம் 6 மாதங்கள் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. சூரியஒளி மூலம் ஆண்டு முழுவதும் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. தரைப் பகுதிகள் மட்டுமின்றி கட்டிடங்களின் மேற்கூரைகளிலும் சோலார் பேனல்கள் அமைத்து மின்உற்பத்தி செய்ய உதவும் ‘மேற்கூரை சூரியஒளி ஆற்றல் உற்பத்தி திட்டம்’ தொழில்முனைவோர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இத்தகைய திட்டங்களுக்கு அரசு ஊக்குவிக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நெட்வொர்க் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படும் முறை தொழில்முனைவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment